News January 23, 2026
தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள்.. புதிய தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம், தி.மலையில் இருந்து செய்யாறு, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து ஆத்தூர், தஞ்சையில் இருந்து கும்பகோணம் ஆகிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு குடியரசு தினத்தன்று (ஜன.26) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 5, 2026
அந்த வேதனை இருக்கே வேதனை.. என்னன்னு பாருங்க

நம்மூரைத் தாண்டி வேறு சில ஊர்களில் சால்னாவுக்கு தனி காசு கேட்டாலே நமக்கு கோபம் வரும். இங்கோ ‘Chilly dusted gold fingers’ என்ற பெயரில், பெட்டிக்கடைகளில் விற்கும் குடல் அப்பளத்தை ஒருவர் ₹150 கொடுத்து வாங்கியுள்ளார். ‘என் வம்சத்தில் அப்பளத்தை ₹150 கொடுத்து வாங்கிய முதல் ஆள் நான்தான்’ என்றும் தனது வேதனையை அவர் SM-ல் கொட்டி தீர்த்துள்ளார். என்னவென்று நினைத்து இந்த பொருளை அவர் ஆர்டர் செய்திருப்பார்?
News April 5, 2026
விஜய் மனசுல பாஜக தான் இருக்கு: குஷ்பு

புதுச்சேரியில் தவெக வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளருக்கு <<19565066>>விஜய் வாய் தவறி<<>> வாக்கு கேட்டார். இந்த வீடியோ SM-ல் வைரலான நிலையில் பலரும் அவரை டிரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், யாருக்கு வாக்கு சேகரிக்கிறோம் என்று தெரியாமல் தங்கள் கட்சி வேட்பாளர் பெயரை அவர் சொல்லியுள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். மேலும் விஜய் மனதில் பாஜகதான் இருக்கு; அது மட்டும் உறுதி என்றும் கூறியுள்ளார்.
News April 5, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. அறிவிப்பு வந்தது

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை(ஏப்.6) அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்காது. அதேநேரம், 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருந்த முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


