News August 27, 2024

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் பேரணி

image

தமிழ்நாடு அரசை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாபெரும் கோரிக்கை பேரணி 29.08.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடல், வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (CPM) இராமமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.

Similar News

News September 16, 2025

விழுப்புரம்: மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி துவக்கம்

image

விழுப்புரம் மாவட்டத்தில், 49-வது ஜூனியர் தடகளப் போட்டி, இன்று (செப்.16) துவங்கியது. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 1,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன

News September 16, 2025

விழுப்புரம்: 16 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 16 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜய், கெடார் காவல் நிலையத்திற்கும், கெடார் காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜயகுமார், மயிலம் காவல் நிலையத்திற்கும், ஆரோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆனந்தன், செஞ்சி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

News September 16, 2025

JUST NOW விழுப்புரம்: அன்புமணியின் பொதுக்குழு செல்லாது

image

அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது, அதில் நியமிக்கப்பட்ட பதவிகளும் செல்லாது, என இன்று(செப்.16) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் MLA ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ராமதாசுக்கு தெரியாமல் கட்சி அலுவலகத்தின் முகவரி தேர்தல் ஆணையத்தில் மாற்றப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைவரல்லாத அன்புமணி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!