News August 27, 2024

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் பேரணி

image

தமிழ்நாடு அரசை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாபெரும் கோரிக்கை பேரணி 29.08.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடல், வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (CPM) இராமமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.

Similar News

News December 13, 2025

விழுப்புரம்: அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

image

கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 16 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது, எதிர்பாராத விதமாக விழுப்புரம், வடபொன்பரப்பி அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 16 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News December 13, 2025

விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

விழுப்புரம் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News December 13, 2025

விழுப்புரம்: ஆட்டோ கவிழ்ந்து வியாபாரி உயிரிழப்பு!

image

விழுப்புரம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் லூர்து பிரபாகர்(55). இவர், ஆட்டோ மூலம் வளையல் வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் லூர்து பிரபாகர் நேற்று முன்தினம் இரவு, ராவணாபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி, ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லூர்து பிரபாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!