News August 27, 2024
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் பேரணி

தமிழ்நாடு அரசை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாபெரும் கோரிக்கை பேரணி 29.08.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடல், வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (CPM) இராமமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்: மின் ஊழியர் வாகனம் மோதி பரிதாப பலி!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த எறும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(50). இவர் சத்தியமங்கலம் மின்சார அலுவலகத்தில் மின்சார பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பணிக்காக புதுச்சேரி திருவண்ணாமலை சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். நல்லான் பிள்ளை பெற்றால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 3, 2025
விழுப்புரம்: மின் ஊழியர் வாகனம் மோதி பரிதாப பலி!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த எறும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(50). இவர் சத்தியமங்கலம் மின்சார அலுவலகத்தில் மின்சார பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பணிக்காக புதுச்சேரி திருவண்ணாமலை சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். நல்லான் பிள்ளை பெற்றால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 3, 2025
விழுப்புரம்: வளர்ப்பு நாயால் முதியவருக்கு கொலை மிரட்டல்!

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணா தேவநாதன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது நாய் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் பற்குணன், கிருஷ்ண தேவநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


