News April 15, 2025
தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி, கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.
Similar News
News December 18, 2025
திருச்சி: பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் வரும் 28, 29 மற்றும் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 18, 2025
பஞ்சப்பூர்: கனரக வாகன முனையம் புதிய டெண்டர் அறிவிப்பு

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.110.97 கோடி மதிப்பீட்டில் கனரக வாகன முனையம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இதில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை டெண்டர் விடப்பட்ட போதும் போதிய வரவேற்பு இல்லை. இந்நிலையில் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் கடைகளுக்கான புதிய டெண்டர் விடப்பட்டு, வாகன முனையம் செயல்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 18, 2025
திருச்சி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திருச்சி மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க.


