News April 15, 2025
தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி, கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.
Similar News
News September 19, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன மாணவ, மாணவிகள் நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
தொட்டியத்தில் ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

தொட்டியம், பண்ணைவீடு பகுதியில் நேற்று மாலை 3 சக்கர ஆட்டோ இளநீா் ஏற்றிக்கொண்டு திரும்பிய போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி பைக்கில் சென்றவர் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை
News September 19, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 1999 மனுக்கள்

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 1999 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கைலாசபுரத்தில் 196, மணிகண்டத்தில் 180, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 186, லால்குடியில் 480, நடுப்பட்டியில் 464, தா.பேட்டையில் 334, எரகுடியில் 458 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.