News November 22, 2024
தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலிறுத்தால்

சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் துவரம்பருப்பு வினியோகிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 6, 2025
சென்னை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

சென்னை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் வழங்கும் தமிழக அரசு

சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. தேவஸ்தானம் கேட்டு கொண்டதால் வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும். தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் அதற்கான ஏற்பாடுகாளை இந்து சமய அறைநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.
News November 6, 2025
சென்னை: 3 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் – வினிஷா தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 4-வதாக மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஸ்ரீதர்-வினிஷா தம்பதியினர் குழந்தையை தரகர்கள் மூலமாக ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். தகவலறிந்த குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


