News April 4, 2025

தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

திண்டுக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

திண்டுக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு கிளிக் செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

திண்டுக்கல்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

image

திண்டுக்கல் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News December 13, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு (17.12.2025 முதல் 26.12.2025 வரை) 7 நாட்கள் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!