News April 4, 2025
தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல்: ஆதார் கார்டில்மாற்றம்.. FREE

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 8, 2025
17 வயது சிறுமியை திருமணம் செய்த விவசாயி கைது!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 17 வயது சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் 45 வயதான விவசாயி தோப்படியான் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தோப்படியானை கைது செய்தனர்.
News December 8, 2025
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய கொள்ளையன்!

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில், கடந்த மாதம் 23ஆம் தேதி, கருப்புச்சாமி என்பவரின் வீட்டில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, 18 பவுன் நகை மற்றும் ரூ.38,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்தது.இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட கள்ளிமந்தயம் போலீசார்,கொள்ளையர்களில் ஒருவரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்கான் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


