News October 24, 2024
தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

செங்கல்பட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் “சிறகை விரிக்கலாம் வாருங்கள்–100” என்ற நிகழ்ச்சியில், தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும், சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா இன்று (24.10.2024) வழங்கி பாராட்டினார்.
Similar News
News November 12, 2025
செங்கல்பட்டு: வரலாற்றில் இடம் பெற்ற கோவளம் கடற்கரை

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு நீலகொடி சான்றிதழ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கோவளம் கடற்கரைக்கு 5 முறையாக சர்வதேச நிலக்குடி சான்றிதழ், கடந்த 2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 21 தேதி, நீலக் கொடி சான்றிதழை பெற்று, தமிழ்நாட்டின் முதல், கடற்கரையாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக நீலகொடி சான்றிதழ் பெற்றதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
News November 12, 2025
செங்கல்பட்டு: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; அடி உதை.!

கேளம்பாக்கத்தில் பள்ளிக்கு மாணவிகள் நடந்து செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக பெற்றோர்களுக்கு தெரியவந்தது. அந்த வாலிபரை மறைந்திருந்த பெற்றோர்களும், பொதுமக்களும் பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்து கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் காயார் கிராமத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியை ஜெய்குமார் (42) போக்சோவில் கைதானார்.
News November 12, 2025
செங்கல்பட்டு: இறந்த தம்பியை பார்த்து சகோதரி உயிரிழப்பு

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தோர் வின்சென்ட் ஆரோக்கியநாதன், 72, வேளாங்கண்ணி தாமஸ், 77. இருவரும், உடன் பிறந்தவர்கள். திடீரென உடல்நல குறைவால் வின்சென்ட் ஆரோக்கியநாதன் இறந்தார். தம்பி இறந்ததை அறிந்த வேளாங்கண்ணி தாமஸ், கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதபோது, திடீரென மயங்கி விழுந்த வேளாங்கண்ணி தாமஸ், அங்கேயே உயிரிழந்தார்.


