News May 8, 2025

தமிழக வனத் துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <>www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News November 14, 2025

புதுகை: மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் இன்று (நவ.14) நடைபெற்றது. உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News November 14, 2025

புதுகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

புதுக்கோட்டை: சூதாடிய 5 பேர் கைது

image

கோட்டைப்பட்டினம் அடுத்த மீனவர் காலனியில் முகமது ஹனிபா (41), ஷேக் அப்துல்லா (28) மார்ஜின் அபுபக்கர் (28), ஜகுபர் ஜாதிக் (35), சாகுல்ஹமீது (32) ஆகிய 5 பேரும் நேற்று பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோட்டைப்பட்டினம் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் 1,000 ரூபாயையும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

error: Content is protected !!