News March 25, 2025
தமிழக ஆளுநர் இன்று கோவை வருகை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வருகிறார். காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின், கோவை வேளாண் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாலை சென்னை திரும்புகிறார்.
Similar News
News March 31, 2025
மருதமலை சிறப்பு தெரியுமா?

கோவையின் அடையாளமாக திகழும் மருதமலை முருகன் கோயில், முதலில் கொங்கு சோளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தலம் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதைய்யன் என்ற பெயர்களில், 9ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இக்கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வள்ளமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.
News March 31, 2025
கோவையில் 7 பேருக்கு தொழுநோய் சிகிச்சை துவக்கம்

கோவையில் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சூலூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 7 பேருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் 223 குழுக்கள் மூலம் 4.95 லட்சம் பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதுவரை 100 நாட்களாக ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளன.
News March 31, 2025
BREAKING: பொள்ளாச்சியில் தம்பதி தற்கொலை

கோவை வால்பாறையைச் சேர்ந்த கார்த்தி, வினோபா தம்பதி. இவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மாக்கினம்பட்டியில் மைத்துனர் நடத்திய ஹோட்டலை கார்த்தி தனது மனைவியுடன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது.