News August 3, 2024
தமிழக அரசுக்கு குமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெருந்தலைவர் காமராஜர் வழி நடந்து, காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கி, தமிழை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு தகைசால் விருது வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. குமரி மாவட்டத்துக்கும், குமரி மக்களுக்கும் இது பெருமை சேர்ப்பதாகும். தமிழக அரசுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 19, 2025
குமரி – பெங்களூரு வந்தே பாரத் ரயில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இது சென்னை மற்றும் பெங்களூருக்கு ஒரே நேரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பயன் அளிக்கும் என்றும், 16 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. இது குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News November 19, 2025
கன்னியாகுமரி: எங்கெல்லாம் மின்தடை? முன்பே அறியலாம்!

குமரி முழுவதும் எளிதாக மின்தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைன் மூலமாக நீங்களே வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளலாம். மின்வாரியம் இதற்கான வசதியை செய்து தந்துள்ளது. இந்த <
News November 19, 2025
குமரி: முடி உதிர்வு காரணமாக பெண் எடுத்த முடிவு

தென்தாமரை குளம் கீழச்சாலை ஐஸ்வர்யா(27) பட்டதாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலை முடி அதிக அளவில் உதிர்ந்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். “தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல்” என அடிக்கடி புலம்பி உள்ளார். நவ.17-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


