News March 28, 2024

தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும்

image

இல்லை தமிழில் நெல்லை பார்லிமென்ட் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மார்ச் 27) பேசினார். அப்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியை இபிஎஸ் சிறப்பாக வழி நடத்துகிறார். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் ஜூன் 4-ஆம் தேதி 40 இடங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என கூறினார்.

Similar News

News January 5, 2026

JUST IN நெல்லையில் தந்தைக்கு தூக்கு தண்டணை.!

image

நெல்லையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று (ஜனவரி 5) சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வள்ளியூரில் கடந்த 2024ஆம் ஆண்டு பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிறுமிக்கு பிறந்த குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் தந்தை குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

நெல்லை: கோவில் பூட்டை உடைத்து.. மர்மநபர்கள் கைவரிசை

image

நெல்லை மாவட்டம், இட்டமொழி அருகே துவரம்பாடு பகுதியில் உள்ள மூணால் இசக்கியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், உண்டியலில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் தங்கத் தாலியை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் மர்மநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!