News April 15, 2024
தபால் வாக்குகள் பதிவு செய்யும் காவல்துறையினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் 745 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஏராளமான காவல் துறையினர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
Similar News
News November 2, 2025
தூத்துக்குடியில் பைக், கார் ஏலம்… காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தபட்ட 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 40 வாகனங்கள் வரும், நவ. 11ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் கோரம்பள்ளத்தில் உள்ள எஸ் பி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இந்த வாகனங்களை 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை பார்வையிடலாம் என எஸ் பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
News November 2, 2025
தூத்துக்குடியில் இன்று ரோந்து பணி காவலர்கள் விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 01.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்கள் அட்டவணையில் குறிப்பிடபட்டுள்ளது.
News November 1, 2025
எல்லை போராட்ட தியாகிகள் தினம் – கனிமொழி முகநூல் பதிவு

தூத்துக்குடி எம் பி கனிமொழி எல்லை போராட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு முகநூல் பக்கத்தில் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று குடியரசாக மலர்ந்த இந்திய ஒன்றியத்தின் மூலாதாரமாக இருக்கும் மாநிலங்களின் எல்லைகள் மொழிவாரியாக வரையறுக்கபட்ட இந்நாளில், எல்லை போராட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். தாய்நிலத்தை காக்க போராடிய அவ்வீரர்களின் தியாகங்கள் யாவும் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


