News December 31, 2024
தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு

கரூர் மாவட்டத்தில் 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர் தலைமை தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News September 14, 2025
குழந்தை பிறந்தவுடன் தாய் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வரகூர் பகுதியை சேர்ந்த அபிமன்யுவின் மனைவி சுஷ்மிதா, நிறைமாத கர்ப்பிணியான இவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆண் குழந்தை பெற்றார். பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அபிமன்யு அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
கரூர்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News September 13, 2025
கரூர்: பசுமாடுகளுக்கு இலவச தோல் கழலை தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் ஏற்பாட்டில், (செப்டம்பர் 30) வரை ஒரு லட்சம் பசுமாடுகளுக்கு இலவச தோல் கழலை நோய்த் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்திற்கு மேற்பட்ட பசுக்களுக்கு இந்த தடுப்பூசி போடலாம் எனவும், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.