News August 15, 2024
தபால் நிலையங்களில் 4052 தேசியக்கொடிகள் விற்பனை

பாரத தேசத்தின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நேரில் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலங்கங்கள் மூலம் 4052 தேசிய கொடிகள் விற்பனையானதாக குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
Similar News
News December 18, 2025
குமரியில் 2,500 காலியிடங்கள்… கலெக்டர் அறிவிப்பு!

குமரி வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.19) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th,12th டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News December 18, 2025
குமரி: அரசு பஸ்சில் நூதன திருட்டு!

கருங்குளத்தாவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பிகாவதி. இவர் தனனுடைய 2 வயது குழந்தையுடன் அரசு பஸ்சில் நாகர்கோவில் சென்றுள்ளார். கூட்டமாக இருந்ததால் அம்பிகாவதியிடம் இருந்து பெண் ஒருவர் குழந்தையை வாங்கியுள்ளார். செட்டிகுளம் சந்திப்பு வந்தபோது குழந்தையை கொடுத்துவிட்டு அந்த பெண் இறங்கி சென்றார். அதன் பின் குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை திருடு போனது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
News December 18, 2025
பேச்சிப்பாறையில் யானைகள் நடமாட்டம்

கடந்த சில நாட்களாக குமரி ரப்பர் கழக பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மைலாறு கோட்டம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 51-ல் 7 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் நடமாடியது. இதனால் ரப்பர் தோட்டத்தில் பால்வடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் தொழிலாளர்களின் தொடர் கூச்சல் காரணமாக யானைகள் பேச்சிப்பாறை அணையின் கரை வழியாக காட்டுப் பகுதிக்குள் சென்றன.


