News August 15, 2024
தபால் நிலையங்களில் 4052 தேசியக்கொடிகள் விற்பனை

பாரத தேசத்தின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நேரில் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலங்கங்கள் மூலம் 4052 தேசிய கொடிகள் விற்பனையானதாக குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
Similar News
News December 14, 2025
குமரி: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

குமரி மக்களே, உங்க வங்கியில் Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 14, 2025
குமரியில் பெண் ஊழியரை தாக்கியவர் கைது!

களியல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்கு கடையாலுமூடுவை சேர்ந்த சுனில் காரில் வந்துள்ளார். சுனில் காருக்கு ரூ.3000க்கு பெட்ரோல் போட்டு விட்டு, பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். பணம் கொடுக்குமாறு கூறிய பெண் ஊழியர் விஜயா (39)வை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கீழே தள்ளி விட்டு மிரட்டியுள்ளார். கடையாலுமூடு போலீசார் அங்கு வந்து சுனிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 14, 2025
குமரியில் மீண்டும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

குமரியில் பல்வேறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருங்கல் இன்ஸ்பெக்டர் மோகனஐயர், கன்னியாகுமரி ஏசிடியு இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, அருமனை இன்ஸ்பெக்டர் வீராச்சாமி, ஆகியோர் தூத்துக்குடிக்கும், நாகர்கோவில் PEW இன்ஸ்பெக்டர் ஜானகி நெல்லைக்கும், கொற்றிக்கோடு இன்ஸ்பெக்டர் உமா திசையன்விளைக்கும், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமர் வள்ளியூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


