News April 16, 2025
தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
Similar News
News December 13, 2025
குமரில் குட்கா கடத்திய 2 பேர் கைது!

குமரி-கேரள எல்லை சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எல்லை பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தி கேரளாவில் இருந்து குமரிக்கு 225 கிலோ குட்கா கடத்தி வந்ததாக சசிகுமார், விஜய் பிரதீப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
News December 13, 2025
குமரி: மரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

தக்கலை மருதவிளை கவுதம ராபின்சன் (31) மரம் ஏறும் தொழிலாளி. நேற்று கவுதம ராபின்சன் மருந்துக்கோட்டையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவுதம ராபின்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தக்கலை போலீசார் விசாரணை.
News December 13, 2025
குமரி: 10th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! ரூ.56,900 சம்பளம்

குமரி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <


