News April 16, 2025
தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
Similar News
News November 3, 2025
கன்னியாகுமரியில் ஒருவர் அடித்துக் கொலை

பேயன் குழியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மனைவியிடம் ராஜன் என்பவர் அத்து மீற முயன்றுள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட கோபாலகிருஷ்ணன் ராஜனிடம் கேட்ட போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணன் கம்பால் ராஜனை தாக்கியதில் ராஜன் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் இரணியல் போலீசில் நேற்று சரணடைந்தார்.
News November 3, 2025
குமரியில் டிஎஸ்பி.க்கள் இடமாற்றம்

குமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கோட்டத்திற்கும், சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்ட டிஎஸ்பி சுரேஷ்குமார் தக்கலை உட்கோட்ட துணை கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று கன்னியாகுமரி மாவட்ட நில மோசடி கருப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கண்ணதாசனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News November 3, 2025
குமரி: முற்றுகை போராட்டம் நாதக நிர்வாகிக்கு நெஞ்சுவலி

இரணியல் சந்திப்பில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (நவ-2) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது அதிக நேரம் வெயிலில் நின்ற காரணத்தால் குளச்சல் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லும் வழியில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக நெய்யூர் சிஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


