News February 18, 2025
தபால் நிலையங்களில் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை தற்போது நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News November 23, 2025
நெல்லை: 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்

மானூர் அலவந்தான் குளம் பகுதியை சேர்ந்த அருள் சேவியர் அங்குள்ள 11ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் அருள் சேவியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
News November 23, 2025
பாளை: இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம்

பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குளோபல் சித்த மருத்துவமனையில் வைத்து இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம் இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமிற்கு முன்பதிவு செய்ய 93456 00723 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
களக்காடு இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சிவசங்கர் (20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


