News March 12, 2025
தபால் சேவை மூலம் பாஸ்போர்ட்: சேலம் முதலிடம்

சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 13, 2025
சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் அருகே உள்ள SAIL (இரும்பாலை வாளாகம்) நிறுவனத்திற்கும் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் சேலம் மாநகர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பாலை வளாகத்திற்கு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 13, 2025
சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேர் மீது வழக்கு

சேலம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தேவையின்றி அலாரம் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேரை ஆர்.பி.எஃப். போலீசார் கைது செய்துள்ளனர். பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் மிகவும் கவனமுடன் பயணிகள் பயணிக்க வேண்டும். பயணிகள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை. இதே நிலை தொடரும் பட்சத்தில் கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2025
தீராத நோய்களை தீர்க்கும் கோட்டை மாரியம்மன்

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனால் இங்கு வந்து வழிபாடு செய்தால் அம்மை, உடலில் உள்ள குறைபாடுகள், குழந்தை வரம் மற்றும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.