News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 23, 2025

திருச்சி: ஶ்ரீரங்கம் கோயில் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சொர்க்கவாசல் திறப்பின் போது சந்தன மண்டபம் நுழைவு சீட்டு ரூ.4000, கிளிமண்டபம் நுழைவு சீட்டு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News December 23, 2025

திருச்சி: ஶ்ரீரங்கம் கோயில் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சொர்க்கவாசல் திறப்பின் போது சந்தன மண்டபம் நுழைவு சீட்டு ரூ.4000, கிளிமண்டபம் நுழைவு சீட்டு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News December 23, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 624 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு வகையான உதவித்தொகை மனுக்கள், தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள் என 624 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!