News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

Similar News

News November 27, 2025

பெரம்பலூர்: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9488018205) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

பெரம்பலூர்: புதிய பேருந்து சேவை துவக்கம்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருத்து – லப்பைகுடிகாடு, பென்னகரம், குரும்பாபாளையம், சில்லக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நான்கு பழைய நகர பேருந்துகளுக்கு பதிலாக, புதிய நான்கு நகர பேருந்துகளை துவக்கி வைத்தார்.

News November 27, 2025

பெரம்பலூர்: புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

image

நெற்குணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ( 27). இவருக்கு கோவையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுமாப்பிள்ளை மனோஜ் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!