News September 14, 2024
தபால் அலுவலகங்களில் நாளை ஆதார் சேவை மையம்

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
Similar News
News January 2, 2026
தூத்துக்குடி: 12th தகுதி.. ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <
News January 2, 2026
தூத்துக்குடி: சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை

விளாத்திகுளத்தில் க.சென்றாயபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்பனசாமி (37) சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். அங்கு, 15 வயது சிறுமிக்கு இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் அப்பனசாமியை (37) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 2, 2026
தூத்துக்குடி: பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (57). இவரது கடைசி மகன் சுந்தர் (25). கட்டிடத்தொழிலாளியான சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுந்தர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவரை தாய் சாவித்திரி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் சுந்தர் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


