News April 21, 2025

தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

image

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 4, 2025

தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (04.12.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர் புரம், சூலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள செய்தியை ஷேர் செய்யுங்க.

News December 4, 2025

கூடலூர்: தாயை தாக்கிய மகன் கைது

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவரது மகனான இளங்கோவனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இளங்கோவன் கொடுத்த பணத்தினை தனது பேத்தியின் பெயரில் தபால் நிலையத்தில் உள்ள கணக்கில் போட்டுள்ளார். மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு இளங்கோவன் தனது தாயை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் இளங்கோவனை போலீசார் கைது (டிச.2) செய்தனர்.

News December 4, 2025

கூடலூர்: தாயை தாக்கிய மகன் கைது

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவரது மகனான இளங்கோவனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இளங்கோவன் கொடுத்த பணத்தினை தனது பேத்தியின் பெயரில் தபால் நிலையத்தில் உள்ள கணக்கில் போட்டுள்ளார். மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு இளங்கோவன் தனது தாயை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் இளங்கோவனை போலீசார் கைது (டிச.2) செய்தனர்.

error: Content is protected !!