News April 15, 2024

தனியார் தோட்டத்தில் 1145 மது பாட்டில்கள் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் அங்கு நடத்திய சோதனையில் 1145 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Similar News

News October 30, 2025

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று வடகிழக்கு பருவ மழை தொடர்பாக மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 29, 2025

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 29, 2025

தூத்துக்குடியில் உயர்கல்வி சேர்க்கை.. கனிமொழி வாழ்த்து

image

நான் முதல்வன் திட்டத்தின் ‘கல்லூரிக் கனவு’ முன்னெடுப்பின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% எனும் அளவில் உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது எனவும், ஈடுபாட்டுடன் செயல்படுத்த துணைநின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றும் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!