News April 15, 2024

தனியார் தோட்டத்தில் 1145 மது பாட்டில்கள் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் அங்கு நடத்திய சோதனையில் 1145 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Similar News

News August 11, 2025

தூத்துக்குடியில் ரூ.10,000 உதவித்தொகையுடன் பயிற்சி!

image

தூத்துக்குடி வேலைவாப்பு & பயிற்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் கோரம்பள்ளம் ITI வளாகத்தில் இன்று தொடங்க உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. 8, 10ம் வகுப்பு, ITI படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். 200 இடங்கள் உள்ளன. ரூ.7,700 – ரூ.10,000 உதவி தொகை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News August 11, 2025

திருச்செந்தூர் பகுதிகளில் மின்தடை

image

திருச்செந்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 11) வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் வடக்கு ரத வீதி, மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் உள் மாட வீதிகளிலும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்செந்தூர் உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.

News August 11, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!