News September 28, 2024
தனியார் கல்லூரி பெண் முதல்வர் மீது தாக்குதல்

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. முதல்வராக இஷபெலியா ராஜகுமாரி உள்ளார். கல்லூரியில் இருந்தபோது ஒரு மர்ம நபர் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் அத்துமீறி உள்ளே புகுந்து அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் முதல்வரை மிரட்டி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். முதல்வரை தாக்கியவர் கிராபட்டியை சேர்ந்த லாலி கிளிண்டன் என்பது தெரியவந்தது.
Similar News
News November 24, 2025
BREAKING: திருச்சி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவர் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட 2477 அரியவகை ஆமைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நாகையைச் சேர்ந்த பயணியை கைது செய்ததுடன், அவர் கடத்திவந்த ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
News November 24, 2025
திருச்சி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) அதிகாலை வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


