News April 17, 2025
தனித்துவ அடையாள எண் காலக்கெடு நீட்டிப்பு

குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பி எம் கிஷான் பயனாளிகளில் இதுவரை ஒரு லட்சத்து 2000 பயனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 20,000 அடையாள எண் பெறாத பிஎம் கிஷான் விவசாயிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
7524 மனுக்களுக்கு இதுவரை தீர்வு – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 16.09.2025 வரை 210 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு 1,05,305 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட 7524 மனுக்களுக்கு இதுவரையிலும் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி

காஞ்சான்காடு பகுதியை சேர்ந்த பிரவின் ஜோஸ் உட்பட 6 பேர் சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திருவனந்தபுரம் தனியார் டிராவல் ஏஜென்சியிடம் ரூ3,36,400 அளித்துள்ளனர். ஒரு ஆண்டுகளாகியும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாததால் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின்தாஸ் உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் களியக்காவிளையில் அகஸ்டின் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News September 17, 2025
குமரி: தரச்சான்று கட்டணம் குறைவு

குமரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அரிசி, தேன், மசாலா பொருட்கள்,எண்ணெய் உட்பட 248 வகை அத்தியாவசிய பொருட்களில் கலப்படத்தை தவிர்க்கும் பொருட்டு அக்மார்க் தரச்சான்று பெற்று உற்பத்தியாளர்கள் விற்பனை செய்கின்றனர். தற்போது அக்மார்க் தரச்சான்று பெற பதிவுக்கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500 ஆக குறைக்கபட்டுள்ளது. அக்மார்க் தரச்சான்று கட்டாயம் ஆகும்.