News April 14, 2024

தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அம்பேத்கர்

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணல் அம்பேத்கார் பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் இல்லை என்ற உயர்ந்த நீதியை நிலை நாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்தார். மேலும், அவரை போன்ற மகத்தான தலைவர் அரசியல் சாசனத்தையே இந்த தேசத்திற்காக உருவாக்கி தந்தபோது எதிலும் அவர் தலைக்கனம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

Similar News

News October 22, 2025

புதுவை: விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கள்

image

புதுவை, பொறையூர் உசுடு ஏரி பகுதியில் சைடு தடுப்பு கட்டையில் பைக் மோதியதில் 2 இளைஞர்கள் பொறையூர் ரோடு கீழே இறங்கும் பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயங்களுடன் இளைஞர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவமமையில் அனுமதித்தனர். இந்நிலையில். அவர்கள் துத்திப்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

News October 22, 2025

காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

image

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முதல் இடை விடாமல் கனமழையானது பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்படைந்தது. இதனை அடுத்து பாதிப்படைத்த பகுதிகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News October 21, 2025

BREAKING: புதுவையில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!