News April 14, 2024
தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அம்பேத்கர்

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணல் அம்பேத்கார் பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் இல்லை என்ற உயர்ந்த நீதியை நிலை நாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்தார். மேலும், அவரை போன்ற மகத்தான தலைவர் அரசியல் சாசனத்தையே இந்த தேசத்திற்காக உருவாக்கி தந்தபோது எதிலும் அவர் தலைக்கனம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
Similar News
News November 6, 2025
புதுச்சேரி: வனக்காப்பாளர் பணியில் இருந்து விடுவிப்பு

புதுச்சேரி அரசின் தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுவை அரசு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் சவுகான் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!
News November 6, 2025
புதுச்சேரி: ஊழியருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

புதுச்சேரி, போலி சான்றிதழ் கொடுத்த குமாரவேல் மீது, பாப்ஸ்கோ நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நடராஜன் அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து குமாரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி கோர்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சேரலாதன், பதவி உயர்விற்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்த குமாரவேலுக்கு 6 நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


