News April 14, 2024

தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அம்பேத்கர்

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணல் அம்பேத்கார் பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் இல்லை என்ற உயர்ந்த நீதியை நிலை நாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்தார். மேலும், அவரை போன்ற மகத்தான தலைவர் அரசியல் சாசனத்தையே இந்த தேசத்திற்காக உருவாக்கி தந்தபோது எதிலும் அவர் தலைக்கனம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

Similar News

News December 13, 2025

புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “வரும் 16.12.2025 முதல் 15.01.2026 வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

புதுவை சமூக செயல்பாட்டாளருக்கு புதுடெல்லியில் விருது

image

புதுடில்லியில் பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில், இன்று(12.12.2025) புரட்சியாளர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அதில் புதுவை மாநிலத்தின் ஏப்ரல்14 இயக்கத்தின் தலைவர் நா.நித்தியானந்தம் அவ்விருதினை பெற்றார். இவருக்கு புதுவையை சார்ந்த பல முற்போக்கு இயக்கங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News December 12, 2025

புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி டிஜிபி சாலிணி சிங் உத்தரவுபடி புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை 13ம் தேதி சனிக்கிழமை காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முதல் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.

error: Content is protected !!