News February 16, 2025

தந்தை கொலையில் 12 வயது மகனும் கைது

image

தென்காசி மாவட்டம் நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் கடந்த 5ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக மனைவி கூறினார். இந்த நிலையில் முத்துக்குமாரின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்தது. அவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்விடம் விசாரித்த போது கணவனை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த நிலையில் நேற்று 12 வயது அவரதுமகனையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 23, 2025

மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு என் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத மின்சார வேலி வனவிலங்கு பிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து அருகில் உள்ள மாவட்ட வன அலுவலக கட்டுப்பாடு அறை எண் 04633 233550. சிவகிரி 04636298523 / 9788392242, புளியங்குடி 04636 235853/9159955369, கடையநல்லூர் 04633 210700/ 9788578344, குற்றாலம் 04633 298190/ 9842085519, தென்காசி 04633 233660/ 9786932520, ஆலங்குளம் 04633 293855/ 9943310855, தகவலை தெரிவிக்கலாம்.

News December 23, 2025

ஆலங்குளம்: வாகனம் மோதி சிறுவர் பலி!

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சிறுவன் இளவேந்தன் (17). தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் நன்பர்களை சந்திக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காடுவெட்டி கிராமம் அருகே கால்வாயில் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த ஊத்துமலை போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளவேந்தன் உயிரிழந்தது தெரியவந்தது.

News December 22, 2025

குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை கொடியேற்றம்

image

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் திருக்கோவிலில் வரும் டிசம்பர் 25ம் தேதி திருவாதிரை திருவிழா முன்னிட்டு அண்டைய தினம் காலை 5.40மணிக்கு மேல் 6.40மணிக்குள் கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. தினமும் அம்பாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!