News February 16, 2025

தந்தை கொலையில் 12 வயது மகனும் கைது

image

தென்காசி மாவட்டம் நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் கடந்த 5ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக மனைவி கூறினார். இந்த நிலையில் முத்துக்குமாரின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்தது. அவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்விடம் விசாரித்த போது கணவனை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த நிலையில் நேற்று 12 வயது அவரதுமகனையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 3, 2025

BREAKING: தென்காசி வழக்கறிஞர் சிகிச்சை பலனின்றி பலி

image

செங்கோட்டை அரசு வழக்கறிஞரும், திமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளருமான ஊர்மேனியழகியான் ஊரை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் இன்று மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News December 3, 2025

BREAKING: தென்காசி அரசு வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

image

தென்காசி நகர் பகுதியான நடுபல்க் சிக்னல் அருகே செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவரை அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் சரமரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை.

News December 3, 2025

தென்காசி: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

image

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!