News March 25, 2025

தந்தை இறங்கிய நேரத்தில் குழந்தையுடன் சென்ற பேருந்து

image

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News December 7, 2025

மயிலாடுதுறை: கொலையாளியை வலை வீசி தேடும் போலீசார்

image

வைத்தீஸ்வரன் கோவில் அருகே திருப்புன்கூரில் காய்கறி கடைக்கு நேற்று குடிபோதையில் காய்கறி வாங்க வந்த சந்திரசேகர் தக்காளி விலை கேட்டு கடை உரிமையாளர் ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தராசால் ராஜாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி சந்திரசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்

News December 7, 2025

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>udyamimitra.i<<>>n என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மூவலூர் ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. முகாமில் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்று ஐடிஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ரூ.8000 முதல் உதவி தொகை வழங்கப்படும்.

error: Content is protected !!