News March 25, 2025
தந்தை இறங்கிய நேரத்தில் குழந்தையுடன் சென்ற பேருந்து

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.16) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.16) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
மயிலாடுதுறையில் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது

மயிலாடுதுறை, தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும், 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியின், உலகக்கோப்பையானது மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் , ராஜ்குமார் , பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.


