News March 25, 2025
தந்தை இறங்கிய நேரத்தில் குழந்தையுடன் சென்ற பேருந்து

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை அருகே 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு கிராமத்தில் புதன் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
மயிலாடுதுறை: பூட்டை உடைத்து திருட்டு!

மாப்படுகையைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி காரைக்குடி சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன், 2 கிராம் நகைகள் மற்றும் வெள்ளி காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


