News April 23, 2025

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்

image

புளியந்தோப்பைச் சேர்ந்த பாலு, குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) குடித்துவிட்டு ரகளை செய்ததோடு, மனைவி வள்ளி மற்றும் மருமகள் அஞ்சலையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தையை ஹெல்மட்டால் அடித்து, பிறகு கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆனால், தந்தையே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News April 23, 2025

சென்னையில் பார்க்க வேண்டிய பூங்காக்கள்

image

▶️ விஸ்வேஸ்வரர் கோபுரம் பூங்கா – அண்ணா நகர்
▶️ செம்மொழி பூங்கா, தேனாம்பேட்டை
▶️ பனகல் பூங்கா, தி.நகர்
▶️ கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கோபாலபுரம்
▶️ திரு.வி.க பூங்கா, ஷெனாய் நகர்
▶️Eco பூங்கா, சேத்துப்பட்டு
▶️ நடேசன் பூங்கா, தி.நகர்
▶️ Eco பூங்கா, அடையார்

உங்கள் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களை இந்த பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்

News April 23, 2025

இலவச கோடைகால வாலிபால் பயிற்சி

image

நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41ஆவது ஆண்டுக்கான கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முகாமானது, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் காலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில், 12 – 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. பயிற்சி நாளன்று தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 93822 07524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

சென்னை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!