News April 15, 2025
தண்டவாளத்தில் உடற்பயிற்சி இரும்பு மனிதன் கைது

நாகர்கோவில் அருகே தாமரைக் குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சமூக வலைதளங்களில் இது பரவியது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று (ஏப்.15) கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Similar News
News December 2, 2025
குமரி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12th, ஏதேனும் ஒரு டிகிரி, முதுகலை பட்டம் படித்தவர்கள் <
News December 2, 2025
குமரி: மாணவி பாலியல் வன்கொடுமை.. டிரைவர் கைது

தக்கலை பகுதியை கல்லூரி மாணவி கடந்த 9ம் தேதி ஆம்னி பேருந்தில் கல்லூரிக்கு கோயம்புத்தூர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் உதவி செய்வது போன்று களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுனர் அனீஷ் (36) என்பவர் மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுக்குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் அனிஷை நேற்று கைது செய்தனர்.
News December 2, 2025
நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் (டிச.2) நாளையும் (டிச.3) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்தில் மற்றம் செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முழு போக்குவரத்து மாற்றம் பற்றி அறிய <


