News April 15, 2025

தண்டவாளத்தில் உடற்பயிற்சி இரும்பு மனிதன் கைது

image

நாகர்கோவில் அருகே தாமரைக் குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சமூக வலைதளங்களில் இது பரவியது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று (ஏப்.15) கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Similar News

News December 3, 2025

நாகர்கோவிலில் இருந்து கோவாவிற்கு சிறப்பு ரயில்

image

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து கோவா மாநிலம் மடகானுக்கு 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை போன்று மடகாணியில் இருந்து 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புதன்கிழமை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.

News December 3, 2025

குமரி: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

image

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 3, 2025

குமரி: பெண் மருத்துவரிடம் தகராறு செய்த நபர்

image

தக்கலை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்த மடிச்சல் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (40) என்பவரை, மருத்துவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். நெற்றி காயத்திற்கு சிகிச்சை பெற வந்தபோது அவர் ரகளையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

error: Content is protected !!