News January 24, 2025

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நான்கு பேர் கைது.

image

பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடைகளில் இருந்து 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். போதை விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்து , அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

Similar News

News July 11, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

பேருந்து நிலையக் கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

image

பட்டுக்கோட்டை நகராட்சி, நரியம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையக் கடைகள் மற்றும் ஆண்டு குத்தகை இனங்களுக்கு வருகின்ற 11.07.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 11க்கு நடைபெற இருந்த பொது ஏலம் /ஒப்பந்தப்புள்ளி நிர்வாக காரணங்களால் 17.07.2025க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது ஏலம் 17.07.2025 வியாழக்கிழமை அன்று காலை 11மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என நகராட்சி அறிவித்திட்டுள்ளது.

News July 10, 2025

சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

image

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW

error: Content is protected !!