News November 24, 2024
தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
Similar News
News November 14, 2025
மதுரை – குருவாயூர் விரைவு ரயில் பகுதியாக ரத்து

தெற்கு ரயில்வே நேற்று ( 13.11.25) வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை – குருவாயூர் விரைவு வண்டி (16327) 22.11.25 /சனிக்கிழமை அன்று, கொல்லம்- குருவாயூர் இடையே இயங்காது. கொல்லம் வரை மட்டுமே செல்லும்.
மறு வழியாக குருவாயூர் – மதுரை விரைவு வண்டி (16328) 23.11.25/ ஞாயிறு அன்று, குருவாயூர்-கொல்லம் இடையே இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
மதுரை: ராஜாஜி மருத்துவமனை விவகாரம் 3 பேர் டிஸ்மிஸ்

மதுரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களில் சிலர் தங்களது பணிநேரத்தின் போது மருத்துவமனை வளாகத்திற்குள் ஏலச்சீட்டு நடத்தி பயனாளர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்ததாக புகார்கள் எழுந்தன, இந்த வீடியோ வைரலானது. இதன் பேரில் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி, ஒப்பந்த நிறுவனத்தில் இரு பெண்கள் ஒரு ஆண் என மூன்று பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் என்றனர்.
News November 14, 2025
மதுரை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மதுரை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…


