News November 24, 2024
தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
Similar News
News November 20, 2025
மதுரை: 10ம் வகுப்பு சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் கார்த்திகை செல்வம்(23). இவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை இரு வீட்டாருக்கும் தெரியாமல் திருமணம்
செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதில் மாணவி 5 மாத கர்ப்பமானார். ஊர் நல அலுவலர் பத்மா இது குறித்து திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
News November 20, 2025
மதுரை: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

மதுரை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <
News November 20, 2025
மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மகேஸ்வரன்(34). பெற்றோரை இழந்த இவர் அவருடைய சகோதரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்துள்ளார். கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


