News November 24, 2024

தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

image

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Similar News

News November 25, 2025

நவ.27ல் மதுரையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நவம்பர் 27 காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் தங்கள் குறைகளை நேரிலும் மனுக்களாகவும் ஆட்சியரிடம் தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

மதுரை: டிச. 5ல் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

image

மதுரையில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் 14வது ஆண்கள் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்களுக்காக, டிசம்பர் 5 அன்று அலங்காநல்லூர் அருகே உள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

News November 25, 2025

மதுரை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

image

மதுரை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!