News November 24, 2024
தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
Similar News
News September 17, 2025
மதுரை: அக்.மாத சிறப்பு ரயில்களின் விவரம்

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 29ஆம் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 6, 13, 20 ,27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2:45 மணிக்கு மதுரை ர மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். *ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் மதுரை வருகை

மத்திய நிதித்துறை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி மதுரை வருகை தர திட்டமிட்டு இருக்கிறார். மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு உணவுப் பொருட்கள் வியாபாரிகள் சங்கம் சார்பாக 80வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வியாபாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
News September 17, 2025
மதுரை: +2 முடித்த பெண்கள் கவனத்திற்கு!

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி இளநிலை பிஏ ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், புவியியல் & இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும் முதுநிலை தாவரவியல் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்