News November 24, 2024
தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
Similar News
News November 22, 2025
மதுரை: எகிறும் மல்லிகை விலை; இரட்டிப்பாக உயர்வு

மதுரை மல்லி கிலோ ரூ.2800, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.800, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.150, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1டன் வரத்து உள்ளது பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
News November 22, 2025
மதுரை: ஓட ஓட விரட்டி கொன்ற இருவர் கைது!

மதுரையில் முத்துமணி போஸ் என்பவர் பைக்கில் சென்றபோது, அவரை கீழே தள்ளி தலையில் கல்லைப்போட்டு <<18327802>>கொலை <<>>செய்ததாகக் கூறி, ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த சரவணக்குமார்(19) மற்றும் கார்த்திகேயன்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வத்தலகுண்டு பகுதியில் ஜூலை 11ம் தேதி சிவமணியை கொலை செய்த வழக்கில் முத்துமணி போஸின் சகோதரர் முனியசாமி ஈடுபட்டதால், பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
News November 22, 2025
மதுரை: போன் தொலைந்து விட்டதா..கவலைய விடுங்க..!

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


