News November 24, 2024

தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

image

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Similar News

News November 7, 2025

மதுரை: ரேஷன் அட்டையில் குறைகளை தீர்க்க நாளை முகாம்

image

மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம், நவம்பர் 8-ஆம் தேதி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலங்களில் நடைபெறும் இந்த முகாமில், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பிற குறைகள் தொடர்பான மனுக்களை மக்கள் அளித்து தீர்வு பெறலாம்.

News November 7, 2025

மதுரை: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

image

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News November 7, 2025

மதுரை: பைக் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

image

சமயநல்லூர் அருகே தோடனேரியைச் சேர்ந்த விவசாயி மாயண்டி, தனது மகன் கிருஷ்ணன் உடன் பைக்கில் சென்றபோது, சமயநல்லூர் கண்மாய் கரை சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாயண்டி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிறுவன் கிருஷ்ணன் லேசான காயமடைந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!