News November 24, 2024

தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

image

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Similar News

News December 1, 2025

மதுரையில் பரவும் டெங்கு… மக்களே உஷார்

image

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சிந்தாமணி பகுதியில் இரண்டு வயது பெண் குழந்தை உட்பட கிராமப்புறங்களிலிருந்து ஒரு பெண், இரு ஆண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் பிரத்யேக காய்ச்சல் வார்டு தயாராக உள்ளது.

News December 1, 2025

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News December 1, 2025

மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் பலி

image

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஜனார்த்தனன் 59 முன்னாள் ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் பணியாற்றியபோது சித்த மருத்துவத் துறையில் வேலை பார்த்து கிளினிக் நடத்த சான்றிதழ் பெற்றார். இச்சான்றிதழை வைத்து சொக்கலிங்கபுரத்தில் கிளினிக் நடத்தினர், நேற்று முன்தினம் கிளினிக்கில் இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!