News April 17, 2025

தடையை மீறினால் நிவாரணம் நிறுத்தப்படும் – அரசு எச்சரிக்கை

image

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களில் எச்சரிக்கையை மீறி மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டால் புதுவை அரசின் மீன்வளத்துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் நிறுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

புதுச்சேரி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<> myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 18, 2025

சனீஸ்வரனை தரிசனம் whatsapp புகார் அறிமுகம்!

image

சனீஸ்வர பகவானை தரிசிக்க திருநள்ளாறு வரும் பக்தர்கள் தரிசனத்தில் குறை இருந்தால் வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்தில் குறை இருந்தால்
9498728334 என்ற whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

News September 18, 2025

சட்டப்பேரவை: திமுக.காங்., உறுப்பினர்கள் வெளியேற்றம்

image

புதுச்சேரி 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. குடிநீர் பிரச்சனையால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை மக்கள் பிரச்சினை பற்றி பேச சட்டசபையை குறைந்தது 5 நாட்களாவது நடத்த வேண்டும். சபாநாயகர் உடன் எதிர்க்கட்சிகள் வாக்குவாதம். எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக காங் உறுப்பினர்கள் குண்டு கட்டாக சட்டசபை காவலர்களால் தூக்கி வெளியேற்றம்.

error: Content is protected !!