News February 17, 2025
தடைகளை நீக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

நங்கநல்லூர் அஞ்சனேயர் கோவில் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 32 அடி உயர ஹனுமான் சிலை அமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராம நவமி,ஆஞ்சநேய ஜெயந்தி உள்ளிட்ட நாட்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது, கடன்,நோய்,பகை தீர பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர், இந்த கோவில் சென்னை நகரின் முக்கிய ஆன்மிகத் தலமாக திகழ்கிறது. Share it
Similar News
News October 17, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில்இன்று (16.10.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News October 17, 2025
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: நயினார் நாகேந்திரன்

சென்னை மின்ட் சாலையில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டம்ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை; பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பவில்லை. சொன்னதை செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சொன்னீர்களே செய்தீர்களா? இன்னும் மூன்றே மாதங்கள் தான். இபிஎஸ் தலைமையில் நமது ஆட்சி அமைந்து விடும்” என தெரிவித்தார்.
News October 17, 2025
சாரி சொல்லும் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்

சென்னை மின்ட் சாலையில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் 5 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை சாலையில் நடமாட முடியவில்லை. திமுக ஆட்சியில் 24 லாக்அப் மரணங்கள் அரங்கேறியுள்ளன. அந்த குடும்பங்களை போனில் அழைத்து முதலமைச்சர் ‘சாரி’ சொல்கிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதானவர் ‘சார்-ன்னு’ சொல்கிறார் என தெரிவித்தார்.