News January 24, 2025
தடுப்பூசி செலுத்திய 3 மாத குழந்தை உயிரிழப்பு

சத்தி கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கவுதமின் மனைவி அசின் (19). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று குழந்தையை அசின் வெள்ளியம்பாளையம்புதூர் அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை ஜிஎச்க்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 9, 2025
ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் ஆன்லைன் தளங்களில் உருவாக்கி முன் பின் தெரியாத நபர்களிடம் இருந்து வீடியோ கால் அழைப்புகள் வரும்என்பதால் எடுக்க வேண்டாம் அவ்வாறு
எடுப்பதினால் நமது புகைப்படத்தை பதிவு செய்து ஆபாசமாக
சித்தரித்து நம்மிடம் பணம் பறிக்கக்கூடும் என ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 9, 2025
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!

ஈரோடு: தென்னை மரத்தில் ரூர்கோஸ் வெள்ளை சுருள் ஈ பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, 1,700 -ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள், – ஈரோட்டில் உள்ள வட்டார தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் தோட்ட கலை அலுவலகத்தை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க
News November 9, 2025
ஈரோடு: G Pay, PhonePe இருக்கா?

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


