News January 24, 2025
தடுப்பூசி செலுத்திய 3 மாத குழந்தை உயிரிழப்பு

சத்தி கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கவுதமின் மனைவி அசின் (19). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று குழந்தையை அசின் வெள்ளியம்பாளையம்புதூர் அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை ஜிஎச்க்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 16, 2025
ஈரோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
குழந்தைகள் பணம் சம்பாதிக்காமல், பள்ளிக்கு சென்று அறிவை சம்பாதிக்கட்டும் என மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
News November 16, 2025
பள்ளி வாகனத்தில் சிறார் நூல் தொகுப்பு

பழங்குடியினர் நலத்துறை மூலம் பள்ளி குழந்தைகளை அவர்களது இல்லங்களிலிருந்தே அழைத்து வர கடந்த மாதத்தில் பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 வாகனங்களில் ஆசனூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் பயண நேரத்தில் வாகனத்தில் நூலை படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும் இந்த வாகனத்தில் சிறார் நூலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
News November 16, 2025
ஈரோடு: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

ஈரோடு மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <


