News December 4, 2024
தஞ்சை: 15 பேருக்கு செயற்கை அவயங்கள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை சார்பில் நேற்று 15 பேருக்கு ரூ. 9.21 லட்சத்தில் செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மருத்துவக்கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன் செயற்கை கால், கைகளை வழங்கினார்.
Similar News
News November 19, 2025
தஞ்சை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News November 19, 2025
தஞ்சை: பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி

சார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அதிகமான பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள், நேற்று கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், அங்கன்வாடி ஊழியர் சித்ரா என்ற பெண் S.I.R பணியில் வேலைப்பளு காரணமாக அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார், அவரை உறவினர்கள் மீட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
News November 19, 2025
தஞ்சை: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


