News December 5, 2024
தஞ்சை: 15க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் மன்ற செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடும் போட்டிகள் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரிய கோயில் நடராஜர் சன்னதியில் நடக்கிறது. இதில், 3 ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3 நிலையாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 10, 2025
தஞ்சாவூர்: போலீஸ் என கூறி ரூ.44 லட்சம் கொள்ளை

மன்னார்குடியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கின் என்பவரின் சகோதரர் அர்ஜுன், பணியாளர் பிரதீபன் ஆகியோர் தஞ்சையில் இருந்து ரூ.44 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, வாண்டையார் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர் ஒருவர் தன்னை குற்றப்பிரிவு காவலர் என கூறி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 10, 2025
தஞ்சாவூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில்,<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!
News December 10, 2025
தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை – பெரும் சோகம்

திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் மாணவி கல்பனா. 10 ஆம் வகுப்பு படித்துவரும் இவர், சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், பெற்றோர் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


