News December 5, 2024
தஞ்சை: 15க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் மன்ற செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடும் போட்டிகள் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரிய கோயில் நடராஜர் சன்னதியில் நடக்கிறது. இதில், 3 ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3 நிலையாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
தஞ்சை: பொது விநியோகத் மக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் (ம) மக்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (டிச.13) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News December 13, 2025
தஞ்சை: திருட்டு வழக்கில் 3 இளைஞர்கள் கைது

கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி-சங்கீதா தம்பதியினர். பாலாஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கீதாவின் தங்கை மகன் பீட்டர், தினேஷ், வசந்த் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
News December 13, 2025
தஞ்சை: திருட்டு வழக்கில் 3 இளைஞர்கள் கைது

கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி-சங்கீதா தம்பதியினர். பாலாஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கீதாவின் தங்கை மகன் பீட்டர், தினேஷ், வசந்த் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


