News September 12, 2024
தஞ்சை விக்கிரவாண்டி சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

தஞ்சை விக்கிரவாண்டி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை நாளை ஆய்வு செய்ய, போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம் வருகை தர உள்ளர். பின்னர் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்து
தஞ்சையிலிருந்து சோழபுரம் வரை சாலை பணி ஆய்வும்,
சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை நான்கு வழி சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
Similar News
News November 22, 2025
தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் இன்று (நவ.22) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
தஞ்சை: பள்ளி மாணவி கர்ப்பம்; ராணுவ வீரர் கைது

திருவையாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி வயிற்று வலி காரணமாக தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவி அளித்த தகவலின் பேரில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரான வீரமணி (65) என்வரை திருவையாறு போலீசார் கைது செய்தனர்.
News November 22, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று (நவ.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


