News September 12, 2024

தஞ்சை விக்கிரவாண்டி சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

image

தஞ்சை விக்கிரவாண்டி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை நாளை ஆய்வு செய்ய, போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம் வருகை தர உள்ளர். பின்னர் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்து
தஞ்சையிலிருந்து சோழபுரம் வரை சாலை பணி ஆய்வும்,
சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை நான்கு வழி சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.

Similar News

News November 9, 2025

தஞ்சை: பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை

image

ஒரத்தநாடு அருகே தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வீரமணி, வீரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து சுமார் 8.30 பவுன் தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்,இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

News November 9, 2025

தஞ்சை நீதிமன்றம் அதிரடி

image

செங்கிப்பட்டியில் கடந்த 2020ம் ஆண்டு சத்தியபாமா என்ற பெண்ணிடம் 10 சவரன் தாலி செயினை வழிப்பறி செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த சண்முகம் (35), அருள் (38) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று‌ வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News November 9, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!