News January 2, 2025

தஞ்சை வந்த 2500 டன் அரிசி

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பு திட்டத்தின் கீழ் சர்க்கரை ,கரும்பு ,பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில், டெல்டா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 2,500 டன் பச்சரிசி சரக்கு ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தது.

Similar News

News November 15, 2025

சம்பா பயிர் நடவு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பயிர் நடவுபணி முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 15, 2025

தஞ்சை: இசைக்கலைஞர் குத்திக் கொலை!

image

கும்பகோணம் அருகே ஏரகாரம் பகுதியைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கலைஞர் பாலாஜி. இவர் அவரது நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அபிஷேக், பிரவீன் ஆகியோரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து வியாழக்கிழமை காலை வயலில் சடலமாக கிடந்த பாலாஜியின் உடலை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி அபிஷேக் மற்றும் பிரவீனை கைது செய்தனர்.

News November 15, 2025

தஞ்சை: சிறுமிக்கு பாலியல் தொல்லை-ஒருவர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (40), அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், ஆடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு, கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!