News January 2, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சாா்பில், 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரையோ அல்லது முதல்வரையோ அணுகி படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

தஞ்சை: உதவி கமிஷனர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

image

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், குப்பை தரம் பிரிப்பதில் 9.57 கோடி‌ ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தன. அதை தொடர்ந்து மாநகராட்சி முன்னாள் ஆணையரும்‌ – தற்போது தூத்துக்குடி உதவி கமிஷனருமான சரவணக்குமார், ஒய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகரன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 26, 2025

தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 26, 2025

தஞ்சையில் அரசு வாகனம் ஏலம் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த மகேந்திர பொலிரோ வாகனம் 10.12.2025ம் தேதி அன்று‌ பொது ஏலத்தில் விடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்தி வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விலை புள்ளி தயார் செய்து விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!