News August 16, 2024

தஞ்சை மாவட்டத்தில் 101 கடைகளுக்கு அபராதம்

image

தஞ்சையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலார்களுக்கு விடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக என தொழிலாளர் துறை சார்பில் நேற்று ஆய்வு மேற்கொள்ப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 163 நிறுவனங்களில் சோதனை செய்ததில், 101 கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து 101 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 30, 2025

தஞ்சை: திருடு போன 60 செல்போன்கள் மீட்பு

image

தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்கள் குறித்து பொதுமக்கள் அளித்த புகார்களின் பேரில், காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு 60 செல்போன்களை மீட்டனர். இவற்றின் மதிப்பு சுமார் 9 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இந்த செல்போன்களை பொதுமக்களிடம் ஒப்படைத்தார்.

News November 30, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழகம் முழுவதும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பயனாளர்களுக்கு, டிச.2 மற்றும் 3ம் தேதி ஆகிய 2 நாட்களில் வழங்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News November 30, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.29) இரவு 10 மணி முதல் இன்று (நவ.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!