News August 16, 2024

தஞ்சை மாவட்டத்தில் 101 கடைகளுக்கு அபராதம்

image

தஞ்சையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலார்களுக்கு விடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக என தொழிலாளர் துறை சார்பில் நேற்று ஆய்வு மேற்கொள்ப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 163 நிறுவனங்களில் சோதனை செய்ததில், 101 கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து 101 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

தஞ்சை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

தஞ்சை: பொது விநியோகத் மக்கள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் (ம) மக்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (டிச.13) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News December 13, 2025

தஞ்சை: திருட்டு வழக்கில் 3 இளைஞர்கள் கைது

image

கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி-சங்கீதா தம்பதியினர். பாலாஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கீதாவின் தங்கை மகன் பீட்டர், தினேஷ், வசந்த் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!