News August 16, 2024

தஞ்சை மாவட்டத்தில் 101 கடைகளுக்கு அபராதம்

image

தஞ்சையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலார்களுக்கு விடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக என தொழிலாளர் துறை சார்பில் நேற்று ஆய்வு மேற்கொள்ப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 163 நிறுவனங்களில் சோதனை செய்ததில், 101 கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து 101 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

தஞ்சாவூரில் 240 டன் குப்பைகள் சேகரிப்பு

image

தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளில் நாள்தோறும் ஏறத்தாழ 110 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்குக்கும், நுண் உரக் கிடங்குகளுக்கும் அனுப்பப்படுகின்றன. ஆனால் நேற்று (அக்.21) அதிகாலை 3 மணி முதல் மாலை 5:30 வரை ஏறக்குறைய 600 தூய்மை பணியாளர்கள் தொடர் மழையிலும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 55 வாகனங்கள் மூலம் ஏறத்தாழ 240 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

News October 22, 2025

தஞ்சை: இந்திய அஞ்சல் துறையியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 22, 2025

தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தை அஇஅதிமுக பொதுச்செயலாளரான, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். உடன் அதிமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட அதிமுக நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!