News January 1, 2025

தஞ்சை: புகையிலை விற்றவர்களுக்கு 2 கோடி அபராதம்

image

தஞ்சை மாவட்டத்தில் ஓராண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 929 பேர் கைது செய்யப்பட்டனர்.  புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட 1131 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து ரூ.2,75,70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

தஞ்சை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

தஞ்சை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாகச் சேவை செய்த பெண்களுக்கு வழங்கப்படும் “ஔவையார் விருது – 2026” ற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்திலும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையம் ஆகியவை சட்டப்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!