News October 19, 2025

தஞ்சை: நடுரோட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு

image

ஒரத்தநாடு பி.எட். கல்லூரி அருகே கடைத்தெருவில் தீபாவளி பொருட்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிய தமிழ்ச்செல்வி என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்த தமிழ்ச்செல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 5, 2026

தஞ்சை: தேர்தல் ருசிகரம் – வாழ்த்து தெரிவித்த வேட்பாளர்கள்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக வழக்கறிஞர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் ராமதாஸ் தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம. க ஸ்டாலின் போட்டிருக்கிறார். இந்நிலையில் இருவரும் கும்பகோணம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்

News April 5, 2026

தஞ்சாவூர்: வீட்டின் கதவை உடைத்து கொள்ளை – பரபரப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவிக்குமார்(66). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு மனைவி சித்ராவுடன் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று ரவிக்குமார் தனது வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 1 சவரன் நகை, ரூ.25,000 மற்றும் பட்டு புடவைகளை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியசைந்துள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 5, 2026

தஞ்சாவூர்: வீட்டின் கதவை உடைத்து கொள்ளை – பரபரப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவிக்குமார்(66). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு மனைவி சித்ராவுடன் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று ரவிக்குமார் தனது வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 1 சவரன் நகை, ரூ.25,000 மற்றும் பட்டு புடவைகளை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியசைந்துள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!