News April 16, 2025
தஞ்சை: கோழிப்பண்னையில் தீ விபத்து

தஞ்சை, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (48) என்பவர் பர்மா காலனி என்ற இடத்தில் கொட்டகை அமைந்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர் டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
News December 14, 2025
தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர் டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
News December 14, 2025
தஞ்சைக்கு ரயில் மூலம் 1,228 டன் உரம் வருகை

தஞ்சாவூரில் சம்பா -தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, சென்னையிலிருந்து சரக்கு ரயிலில் 1,228 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தன. பின்னர், உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியார் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


