News April 16, 2025
தஞ்சை: கோழிப்பண்னையில் தீ விபத்து

தஞ்சை, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (48) என்பவர் பர்மா காலனி என்ற இடத்தில் கொட்டகை அமைந்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
தஞ்சை: படிக்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கும்பகோணம் அருகே மாலை நேர தனி வகுப்பில் படிக்க வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏசி மெக்கானிக் விக்னேஷ் (32) என்பவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆசிரியையின் கணவரான விக்னேஷ், மனைவி இல்லாத நேரத்தில் சிறுமிக்கு இந்த தொல்லையை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.
News December 22, 2025
தஞ்சை: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், hrcnet.nic.in என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்
News December 22, 2025
தஞ்சையில் தேர்வு ஒத்திவைப்பு

தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாள், உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13, 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு நிர்வாகக் காரணங்களுக்காக டிசம்பர் 27, 28-ஆம் தேதிகளில், தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


