News April 17, 2025
தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
தஞ்சையில் அரசு வாகனம் ஏலம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த மகேந்திர பொலிரோ வாகனம் 10.12.2025ம் தேதி அன்று பொது ஏலத்தில் விடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்தி வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விலை புள்ளி தயார் செய்து விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
தஞ்சையில் அரசு வாகனம் ஏலம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த மகேந்திர பொலிரோ வாகனம் 10.12.2025ம் தேதி அன்று பொது ஏலத்தில் விடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்தி வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விலை புள்ளி தயார் செய்து விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
தஞ்சை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்குவதற்கும், விண்ணப்பத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


