News April 17, 2025
தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
தஞ்சை: இரவு ரோந்து காவலர்கள் நியமனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், (நவ. 18) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News November 18, 2025
தஞ்சாவூர்: நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து இன்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை.சந்திரசேகரன் MLA தஞ்சை எம்பி முரசொலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 18, 2025
தஞ்சை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


