News April 17, 2025

தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

image

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

தஞ்சை ஓவியத்திற்கு தேசிய விருது

image

நுணுக்கமான கலைப்படைப்பான நட்சத்திர வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட (மினியேச்சர்) தஞ்சை ஓவியத்திற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் டி.டி. கமலக்கண்ணனுக்கு உயரிய தேசிய விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கலைத் திறமையை அங்கீகரித்தார். இந்த ஓவியத்தில், தஞ்சை ஓவியத்தின் பொலிவு மற்றும் நுணுக்கமான விவரங்கள் ஆகியவை நட்சத்திர அமைப்பில் வரையப்பட்டிருந்தது.

News December 12, 2025

பொதுவிநியோக குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நாளை(டிச.13) காலை 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரைநடைபெற உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின், தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News December 12, 2025

தஞ்சாவூர்: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal<<>>.incometax.என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!