News April 17, 2025

தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

image

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

தஞ்சாவூர்: மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் (29), எட்டாம் வகுப்பு மாணவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் பெற்றோர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.

News November 8, 2025

தஞ்சாவூர்: 8ம் வகுப்பு போதும்.. அரசு வேலை ரெடி!

image

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள ‘<>இங்கே<<>>’ க்ளிக் செய்யவும். SHARE!

News November 8, 2025

தஞ்சை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.

▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.

▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!