News April 17, 2025
தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர் டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
News December 14, 2025
தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர் டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
News December 14, 2025
தஞ்சைக்கு ரயில் மூலம் 1,228 டன் உரம் வருகை

தஞ்சாவூரில் சம்பா -தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, சென்னையிலிருந்து சரக்கு ரயிலில் 1,228 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தன. பின்னர், உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியார் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


