News April 16, 2024
தஞ்சை அருகே நூல் வெளியீட்டு விழா.

திருக்காட்டுப்பள்ளி பழநியாண்டவர் வழிபாட்டுச் சங்கத்தின் மூலமாக கடந்த இரு மாதங்களாக கோயில் வளாகத்தில் திருப்புகழ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முருக பக்தர்கள் திருப்புகழை பயில ஏதுவாக 150 திருப்புகழ் பாடல்களை தொகுத்து ” இருப்பவல் திருப்புகழ்”என்ற நூலை தயாரித்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் முருக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News December 2, 2025
தஞ்சை: இன்று ரயில் நிலையத்தின் 164ஆவது ஆண்டு!

தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஆண்டு ஜூலை1ம் தேதி ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டைக்கு தொடங்கியது.தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் நாகை தஞ்சாவூர் இடையே அகல ரயில் பாதை இந்தியாவின் கிரேட் தென்னிந்திய ரயில்வே என்ற பெயரில் 1861 டிசம்பர் 2ம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டு, இன்றுடன் தஞ்சை ரயில் நிலையம் 164 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
News December 2, 2025
தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
தஞ்சை: இடிந்தது விழுந்த பள்ளியின் சுவர்!

தஞ்சையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடு கட்டிடம் உள்ளிட்டவை இடிபாடுகளில் சிக்கி உள்ளன. இந்நிலையில் நேற்று (டிச. 01) தஞ்சாவூர் பிளாக் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பள்ளி மாணவர்களும், சாலையில் நடந்து செல்வோரும் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இதனை சரி செய்யும் பணிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.


