News August 3, 2024
தஞ்சையில் 14 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி, மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதில், தஞ்சை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முதல்நிலை வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி பதவி உயர்வு வழங்கப்பட்டு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.
Similar News
News December 9, 2025
தஞ்சாவூரில் 30 பேர் கைது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாபநாசத்தில் இருந்து சென்னைக்கு பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட தயாராக இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
News December 9, 2025
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வடச்சேரி, ஈச்சங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(டிச.10) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் வடச்சேரி, திருமங்கலக்கோட்டை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


