News April 13, 2025
தஞ்சையில் முருகனுக்கு அறுபடை வீடு இருக்கு! தெரியுமா?

தஞ்சையில் உள்ள முருகனின் அறுபடை வீடு, முதல் படைவீடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், அலங்கம். இரண்டாம் படைவீடு: சுப்பிரயமணிய சாமி கோயில், பூக்கார தெரு. மூன்றாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில் சின்ன அரிசிக்கார தெரு. நான்காம் படைவீடு: சுவாமிநாத சுவாமி கோயில், ஆட்டுமந்தை தெரு. ஐந்தாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில், குறிச்சி தெரு கீழவாசல். ஆறாம் படைவீடு: பால தண்டாயுதபாணி சுவாமி கோயில், வடக்கு அலங்கம்.
Similar News
News January 8, 2026
தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சாவூரில் அமைந்துள்ள சரபோஜி கல்லூரியில் வருகின்ற சனிக்கிழமை (ஜனவரி 10) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் மன்னர் சரபோஜி கல்லூரியில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News January 8, 2026
தஞ்சை: கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திருமண்டக்குடியைச் சேர்ந்த கூரியர் ஊழியரான புகழேந்தி, மருதாநல்லூரைச் சேர்ந்த சிபிசக்கரவர்த்தி நண்பர்களுடம் சேர்ந்து புகழேந்தியை தாக்கியதில் உயிரிழந்தார். புகாரின்பேரில் 5 பேர் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சிபிசக்கரவர்த்தி, குபேரன், விக்னேஷ் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
News January 8, 2026
தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே சித்திரக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜாய்சன் (26) என்பவர் நேற்று (ஜனவரி 07) தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தஞ்சாவூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


