News March 21, 2024
தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை குளுமையை ஏற்படுத்தும்.
Similar News
News October 20, 2025
தஞ்சை: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT
News October 20, 2025
தஞ்சை: மழையால் ஒரே நாளில் 7 வீடுகள் இடிந்து சேதம்

பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்த நிலையில் திடீரென கன மழை பெய்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 3 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.
News October 20, 2025
தஞ்சை: மதுபோதையில் தொழிலாளி அடித்துக் கொலை!

துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(39). நேற்று முன்தினம் இரவு பேராவூரணி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு துவரங்குறிச்சி செல்லும் வழியில் பள்ளத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த பள்ளத்தூரை சேர்ந்த செந்தில்(41) என்பவர், பாண்டியராஜனிடம் தகராறில் ஈடுபட்டு கட்டையால் அடித்துள்ளார். இதில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.