News March 30, 2025
தஞ்சையில் நீச்சல் பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கோடைகால விடுமுறையையொட்டி, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 5 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த வகுப்புகள் முதற்கட்டமாக ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 13 வரை நடக்கிறது. இப்பயிற்சியில் பங்குபெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அறிய 04362 – 235633, 74017-03496 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
Similar News
News April 10, 2025
தஞ்சையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் நாளை (வியாழன்) அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்றுள்ள மதுபான கடைகளும், மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம், அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனும் காரணத்தினால் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
News April 9, 2025
கோடி நலம் தரும் தஞ்சை கோடியம்மன் ஆலயம்

தஞ்சை – திருவையாறு செல்லும் வழியில் இந்த கோடியம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் கோடி அவதாரம் எடுத்து அரக்கர்களை வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு கோடியம்மன் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருமண தடை, மகப்பேறு கிடைக்க பெண்கள் வழிபடுகின்றனர். மேலும் இந்த அம்மனை வணங்கினால் கண் திருஷ்டி, பணக் கஷ்டம் போன்ற அனைத்தும் நீங்கும் என கூறுகின்றனர். இதை SHARE செய்யவும்.