News September 4, 2025
தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, தஞ்சையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
தஞ்சை: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு மது போதையில் முனியாண்டி என்பவர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி முனியாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (டிச.10) தீர்ப்பளித்தார்.
News December 11, 2025
தஞ்சை: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு சிறை!

அய்யம்பேட்டை கடந்த 2022-ம் வருடம் 15 வயது சிறுமிக்கு பள்ளி ஆசிரியரான பாலசுப்பிரமணியம் பள்ளியில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது அம்மா பாபநாசம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் பாலசுப்பிரமணியம் கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தஞ்சாவூர் POCSO நீதிமன்ற குற்றவாளி பாலசுப்பிரமணியம் 3 வருட கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
News December 11, 2025
தஞ்சை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று (டிச.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


