News August 18, 2024

தஞ்சையில் கூட்டு வன்கொடுமை: பெண் எஸ்.ஐ. மாற்றம்

image

தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அவரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண் போலீஸ் எஸ்.ஐ கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உடனடி சட்ட உதவி வழங்காமல் அலைக்கழிக்க செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 15, 2025

தஞ்சை: வெளிநாட்டு வேலை மோசடி-4 பேர் கைது

image

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்ட இளைஞர்களை மியான்மர் அழைத்து சென்று மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ராஜ்குமார், மணவாளன், தீபக், அபிஷேக்ராஜன் ஆகிய 4 ஏஜென்ட்கள் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர். மேலும் சமீபத்தில், சுற்றுலா விசா மூலம் மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் உட்பட 465 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தஞ்சை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 15, 2025

தஞ்சை: 31,000 கிலோ உரங்கள் பறிமுதல்

image

புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கிடங்கில் வேளாண் துறை உதவி இயக்குநர் செல்வராசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் 30 ஆயிரத்து 970 கிலோ குருணை வடிவிலான உரமும், அரை லிட்டர், ஒரு லிட்டா் பாட்டில்களில் திரவ வடிவில் 550 லிட்டர் உரங்களுக்கு உரிமம் பெறப்படவில்லை என்பதால் காவல் நிலையத்தினர் முன்னிலையில் ரூ.62.25 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள், உர பாட்டில்களை இயக்குநர் செல்வராசு பறிமுதல் செய்து, சீல் வைத்தார்.

error: Content is protected !!